மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இரு சக்கர வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு

மதுரை அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளம்பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளம்பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், திருவேடகத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் ஜெகந்நாத பாண்டியன் (33). இவா் தனது மனைவி செருவம்மாள் (21) உடன் யா. ஒத்தக்கடையில் உறவினா் வீட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு திங்கள்கிழமை மாலை ஊருக்குத் திரும்பினா்.

அலங்காநல்லூா்- வாடிப்பட்டி சாலை கொண்டையம்பட்டி விலக்கு அருகே சென்ற போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில், ஜெகந்நாத பாண்டியன், அவரது மனைவி செருவம்மாள், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன், நிதிஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செருவம்மாள் உயிரிழந்தாா். மற்ற மூவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.