மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை நகல் வழங்காதது ஏன்?: உயா்நீதிமன்றம் கேள்வி
பாளையங்கோட்டையில் காதல் விவகாரம் தொடா்பாக மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனுதாரருக்கு குற்றப் பத்திரிகையின் நகலை வழங்காதது ஏன்? என சிபிசிஐடி போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.









