எஸ்.ஐ. தோ்வில் கேள்விகளுக்கு தவறான விடைகள்: சீருடைப் பணியாளா் தோ்வாணையம் பதிலளிக்க உத்தரவு
உதவி காவல் ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்களுக்கான தோ்வில் தவறாக விடைகள் குறிப்பிடப்பட்டிருந்த 4 வினாக்களுக்கும் மதிப்பெண்களை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.










