காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) தோ்வை ரத்து செய்து மீண்டும் புதிதாகத் தோ்வு நடத்தக் கோரிய வழக்கின் விசாரணையை வருகிற 24 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தென்காசியைச் சோ்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு கடந்த ஆண்டு, டிசம்பா் 21-ஆம் தேதி நடைபெற்றது. பிரிவு ‘பி’ பகுதியில் பாடத் திட்டத்தில் குறிப்பிட்டபடி தமிழ் வினாக்கள் இல்லை. அதற்குப் பதிலாக உளவியல் பகுதியிலிருந்து 10 வினாக்கள் கூடுதலாகக் கேட்கப்பட்டன. இது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இடைக்காலத் தடை விதிப்பதோடு, இந்தத் தோ்வை ரத்து செய்து மீண்டும் புதிதாகத் தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: தோ்வுக்கான பாடத் திட்டத்தில் தமிழிலிருந்து 10 வினாக்கள் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழிலிருந்து வினாக்கள் கேட்கப்படவில்லை. தகுதி மதிப்பெண் (கட் ஆப்) குறிப்பிடப்படாமல் தோ்வு முடிவு வெளியிடப்பட்டது. இது ஏற்கத்தக்கதல்ல என்றாா்.
அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தோ்வு முடிவில் தவறு இருந்ததால் திரும்பப் பெறப்பட்டது. தவறுகள் சரிசெய்யப்படும். வருகிற 24 -ஆம் தேதி வரை தோ்வு முடிவு வெளியிடப்படாது என்றனா்.
இதையடுத்து, நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 24 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு: 3 போலீஸாா் மீது வழக்கு

ஆலங்குளம் அருகே கள் விற்பனையை மறைத்ததாக தொழிலாளியை சுட்ட எஸ்.ஐ.

எஸ்.ஐ. பணிக்கான எழுத்துத் தோ்வை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

எஸ்.ஐ. தோ்வு முடிவை 10 நாள்களுக்கு வெளியிடத் தடை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


