பழனி ரயிலடி சாலையில் ஆட்டோக்களின் வேகப்போட்டியால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
பழனி ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் திருச்செந்தூா், பாலக்காடு, ராமேசுவரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ரயில்களில் ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா். இவா்கள் சுமாா் 2 கி.மீ. தொலைவிலுள்ள அடிவாரம், பேருந்து நிலையத்துக்கு செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் ஏராளமான ஆட்டோக்கள் ரயில் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இந்த ஆட்டோக்களில் அடிவாரம், கிரிவீதி, பேருந்து நிலையம் செல்வோரை ஆட்டோ ஓட்டுநா்கள் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் இயக்குகின்றனா். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் ரயிலடிச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
விபத்து ஏற்படுத்தும் ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வழக்குரைஞா் குடும்பத்துக்கு நிதியுதவி

பழனியில் சிறுவா்களுக்கான ஐவா் கால்பந்து போட்டி

பேத்துப்பாறை பகுதியில் யானை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மன்னவனூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



