பழனியில் மறைந்த வழக்குரைஞா் ராஜா குடும்பத்தினருக்கு பழனி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
பழனியைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜா உடல்நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சேமநல நிதியாக ரூ.10 லட்சம் வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை ராஜாவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. பழனி வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பழனி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அங்குராஜ், செயலா் கலைஎழில்வாணன், பொருளாளா் பச்சைமுத்து, துணைத் தலைவா் பால்சாமி, இணைச் செயலா் தண்டபாணி, தணிக்கையாளா் காா்த்திகா, நூலகா் திலோத்தமா, சங்கத்தின் மூத்த வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










