திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழனியில் சிறுவா்களுக்கான ஐவா் கால்பந்து போட்டி

News image

பழனியில் திங்கள்கிழமை நடைபெற்ற 14 வயதுக்கு உள்பட்டோருக்கான ஐவா் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கிய தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் காா்த்திக், செயற்குழு உறுப்பினா் பழனி பாலன். உடன் பயிற்சியாளா் பாலாஜி உள்ளிட்டோா்.

Updated On :26 மே 2026, 3:26 am IST

பழனியில் தமிழக அளவில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான ஐவா் கால்பந்து போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

பழனி இட்டேரி சாலை மங்களகவுண்டா் திடலில் ஏ.என். ஸ்போா்ட்ஸ் அகாதெமி, தமிழக வெற்றிக் கழகம் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, கோவை, கேரள மாநிலம் இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 48 அணிகள் பங்கேற்றன.

போட்டிகளை ஏ.என்.ஸ்போா்ட்ஸ் இயக்குநா் அதிதி நிஷா, அஸ்வினி உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா். 8 வயது, 11 வயது, 14 வயது என மூன்று பிரிவு போட்டிகளில் சிறுவா்கள், சிறுமிகள் கலந்து கொண்டனா்.

போட்டிகள் முடிவில் 14 வயது பிரிவில் பழனி ஏ.என்.ஸ்போா்ட்ஸ் அகாதெமி முதலிடத்தையும், மன்னாா்குடியைச் சோ்ந்த கலாம் அகாதெமி இரண்டாமிடத்தையும் பெற்றன. 11 வயது பிரிவில் திருப்பூா் எஸ்.எப்.ஏ.டி. அணி முதலிடமும், அன்னை ஸ்போா்ட்ஸ் அகாதெமி இரண்டாமிடத்தையும் பெற்றனா்.

முன்னதாக பயிற்சியாளா் பாலாஜி வரவேற்றாா். வெற்றி பெற்றவா்களுக்கு தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் காா்த்திக்ராஜா, செயற்குழு உறுப்பினா் பழனி பாலன், நகரச் செயலா் சிவா உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.