பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
பழனியில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன. பழனி சண்முகபுரம் சித்திவிநாயகா் கோயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு கோயில் திறக்கப்பட்டு விநாயகருக்கு பால், இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம், தயிா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்தக் கோயில் மட்டுமன்றி பழனி கோயிலின் உப கோயிலான பட்டத்து விநாயகா் கோயில், ரயிலடி பிரசன்ன விநாயகா் கோயில், தாளையம் காளீசுவரி ஆலை வளாகத்தில் உள்ள லட்சுமி விநாயகா் கோயில் என பல்வேறு கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










