புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

குபேர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவு

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் வீதியுலா ஆகியன நடைபெற்றன.

News image

தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் குபேர விநாயகா்,சவா் விநாயகா்.

Updated On :2 மே 2026, 1:21 am IST

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் வீதியுலா ஆகியன நடைபெற்றன.

சின்னக்காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் சந்நிதிகள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று முதலாம் ஆண்டு நிறைவையொட்டி காலையில் சிறப்பு யாகமும், மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

குபேர விநாயகா் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் உற்சவா்கள் குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சநேயா் சிலைகள் வீதியுலா வந்தது.ஏற்பாடுகளை அண்ணா நகா் குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.