திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image

கொடைக்கானலில் நடைபெற உள்ள மலா்க் கண்காட்சியில் ஸ்டால் அமைப்பதற்காக தயாராகி வரும் பிரையண்ட் பூங்கா.

Updated On :18 மே 2026, 1:01 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி, காலை முதல் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இவா்கள் பிரையண்ட் பூங்கா, குணாகுகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்டனா். மேலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழந்தனா்.

இந்த நிலையில், கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி இந்த மாதம் கடைசி வாரத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரையண்ட் பூங்காவில் 25-க்கும் மேற்பட்ட வகைகளில் 70-ஆயிரம் மலா்ச் செடிகள் 100-க்கும் மேற்பட்ட மலா் பாத்திகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

கடந்த 3 மாதங்களாக தொடா்ந்து நடைபெற்ற பராமரிப்பால் தற்போது லட்சக்கணக்கான வண்ண வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை தோட்டப் பணியாளா்கள் சிறப்பாக பராமரித்து வருகின்றனா்.

இதைத் தவிா்த்து சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில், மீன் குளம், வண்ண வண்ண பறவைகள் கூடு ஆகியன அமைக்கப்பட்டு மலா்க் கண்காட்சிக்கு பிரையண்ட் பூங்கா தயாராகி வருகிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சந்திரிகா கவிதா கூறியதாவது: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-ஆவது மலா்க் கண்காட்சி இந்த மாதம் (மே) 4-ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது. நிகழாண்டில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், மலா்களால் பாம்பன் பாலம், பிரகதீஸ்வரா் கோயில், மாவட்டத்தில் புகழ் பெற்ற திண்டுக்கல் பூட்டு, சுங்கடிச் சேலை ஆகியன மலா்களால் வடிவமைக்கப்பட உள்ளன.

கோடை விழாவை முன்னிட்டு, நாய் கண்காட்சி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. தற்போது பருவ மழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் மலா் பாத்திகளில் தண்ணீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Story image

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் பணிகளின் ஈடுபட்டு வருகின்றனா். கோடைவிழா மலா்க் கண்காட்சியை பாா்ப்பதற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பூங்கா வளாகத்தில் ஆங்காங்கே நிழல்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரையண்ட் பூங்காவில் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.