வேடசந்தூா் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா் காரில் எடுத்து வரப்பட்ட ரூ.84,600-ஐ வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள சேனன்கோட்டையில் தோ்தல் பறக்கும் படையினா், வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வேடசந்தூரிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்ற காரை மறித்து சோதனையிட்டதில், ரூ.84,600 இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னா், காரில் வந்த வேடசந்தூரைச் சோ்ந்த ஜமாலுதீனிடம் விசாரித்தபோது, பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், வேடசந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
பின்னா், அந்தப் பணம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன் மூலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1.62 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.53,400 பறிமுதல்

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


