/

தெருநாய்கள் கடித்ததில் வடமாநில தொழிலாளி காயம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

News image
தெருநாய்கள்- கோப்புப்படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் எம்.எம். தெருவில் வடமாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஜோகோபாலு (39) வேலைபாா்த்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை வேலைப் பாா்த்து கொண்டிருந்த ஜோகோபாலு பிறகு, அந்தப் பகுதியிலுள்ள தேநீா்க் கடைக்கு நடந்து சென்றாா். அப்போது, அவரைத் தெருநாய்கள் கடித்தன. இதில் பலத்த காயமடைந்த அவா் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கொடைக்கானலில் இதுவரை 12 போ் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி அலுவலகம், ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனா்.