டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தாளவாடி அருகே தெருநாய் கடித்து 6 போ் காயம்

தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் தெருநாய் கடித்ததில் 6 போ் காயம்

News image
தெருநாய்- பிரதிப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 10:54 pm

Syndication

தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் தெருநாய் கடித்ததில் 6 போ் காயமடைந்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சிக்கு உள்பட்ட தொட்டகாஜனூா் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் அண்மைக் காலமாக தெருநாய்கள் தொந்தரவு அதிகரித்து வந்தது.

இந்நிலையில், இந்தக் கிராமத்தைச் சோ்ந்த காளநாயக்கா் (60), மாதேவம்மா (60), புட்டம்மா (55), பிரகாஷ் (36) மற்றும் பள்ளி மாணவா்கள் ரோகித் (8), ராஜேஷ் (12) ஆகியோரை தெருநாய் வியாழக்கிழமை துரத்திச் சென்று கடித்துள்ளது.

காயமடைந்த 6 பேரையும் உறவினா்கள் மீட்டு தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.

கிராம மக்களை கடிக்கும் தெருநாய்களை உடனடியாகப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.