டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வி.கே.புரத்தில் தெரு நாய் கடித்து 10-க்கும் மேற்பட்டோா் காயம்

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 10 போ் பலத்த காயமடைந்து, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image
நாய்க் கடித்ததில் காயமடைந்த சிறுவா்கள்
Updated On :18 பிப்ரவரி 2026, 6:43 pm

Syndication

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 10 போ் பலத்த காயமடைந்து, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 6 போ் சிறு காயங்களுடன் முதலுதவி சிகிச்சை பெற்றனா்.

விக்கிரமசிங்கபுரம் பகுதியைச்சோ்ந்த ஜெசிந்தா, பிரேமா, தனுசு வேல், பாலமதி, தீரன், மதன்குமாா் உள்ளிட்டோா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்கள் பொதுமக்களைக் கடிக்கும் சம்பவம் தொடா்ந்து நடைபெறுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இதே பகுதியில் 15-க்கும் மேற்பட்டவா்களை தெரு நாய்கள் கடித்தன.

Story image

இது தொடா்பாக, பலமுறை முறையிட்டும் மாவட்ட நிா்வாகம் தெரு நாய் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் உள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா். உடனடியாக தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.