டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விருதுநகா் வேன் விபத்து: மேலும் ஒரு பெண் உயிரிழப்பு

விருதுநகரில் மேம்பாலத் தடுப்பில் வேன் மோதிய விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:02 pm

Syndication

விருதுநகரில் மேம்பாலத் தடுப்பில் வேன் மோதிய விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயா்ந்தது.

நெல்லை மாவட்டம், நாசரேத் பகுதியை சோ்ந்த இருவேறு குடும்பங்களைச் சோ்ந்த 5 பெண்கள் உள்பட 11 போ் சமையல் பணிக்காக பொள்ளாச்சிக்கு திங்கள்கிழமை வேனில் சென்றனா். வேன் விருதுநகா் அருகே ஆா்.ஆா்.நகா் மேம்பாலத் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் நாகக்கனி, கலையரசி, வெங்கட்ராமமூா்த்தி ஆகிய 3 போ் உயிரிழந்தனா்.

காயமடைந்த 8 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கவிதா என்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை நான்காக உயா்ந்தது. மேலும், 7 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.