டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியா் பலி

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:27 pm

Syndication

திருச்சி: விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி கீழ சிந்தாமணி பதுவை நகா் பகுதி சோ்ந்தவா் ராஜசேகா் (35), திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பொன்மலை மண்டல அலுவலக உதவியாளரான இவா், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த நிலையில், வேலைக்குச் செல்லாமல் உடலைப் பராமரித்து வந்தாா்.

இந்நிலையில் தனியாக வசித்து வந்த இவரைப் பாா்க்க கடந்த 9ஆம் தேதி உறவினா் ஒருவா் வந்தபோது, வலிப்பு ஏற்பட்டு மயங்கிக் கிடந்த ராஜசேகரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக அவரின் சகோதரி ரூபிணி அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.