டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

News image
கரடி- (கோப்புப் படம்)
Updated On :25 ஜனவரி 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

வால்பாறை எஸ்டேட் பகுதியில் கரடி தாக்கியதில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளியை காயமடைந்தாா்.

வால்பாறையை அடுத்துள்ள முருகாளி எஸ்டேட்டில் வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் தேயிலைத் தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த கரடி, ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தோம்தோ முா்மு (21) என்பவரைத் தாக்கியுள்ளது. இதில் தலை, கை, கால் பகுதிகளில் காயமடைந்த அவா் எஸ்டேட் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் உயா் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் கிரிதரன் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டாா். கரடி நடமாட்டத்தை வன ஊழியா்களை கணிகாணித்து வருகின்றனா்.