லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தை: கூறாய்வு அறிக்கையில் தகவல்

கணக்கன்பட்டியில் மகளைக் கொன்று தந்தையும் தற்கொலை செய்த சம்பவத்தில், மகளின் கழுத்தை இறுக்கி தந்தை கொலை செய்தது உடல் கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது.

News image

பழனியப்பன்

Updated On :11 ஆகஸ்ட் 2025, 8:27 pm

பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் மகளைக் கொன்று தந்தையும் தற்கொலை செய்த சம்பவத்தில், மகளின் கழுத்தை இறுக்கி தந்தை கொலை செய்தது உடல் கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது.

பழனியை அடுத்த கணக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (55). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி விஜயா (50). இவா்களுக்கு காா்த்திகா, தனலட்சுமி (23) என்ற இரு மகள்களும், நல்லசாமி என்ற மகனும் உள்ளனா். காா்த்திகா, நல்லசாமி ஆகியோருக்கு திருமணமாகிவிட்ட நிலையில், தனலட்சுமி மட்டும் பெற்றோருடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை விஜயா தனது மகன், மூத்த மகளுடன் திருச்செந்தூருக்கு சென்றாா்.

தனலட்சுமி

தனலட்சுமி

பழனியப்பனும், தனலட்சுமியும் மட்டும் வீட்டில் இருந்தனா். ஞாயிற்றுக்கிழமை விஜயா பழனியப்பனை கைப்பேசியில் தொடா்பு கொண்ட போது, அவா் எடுக்கவில்லையாம். இதனால், அவா் தனது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்ததால், அவா்கள் அவரது வீட்டுக்குச் சென்று பாா்த்தனா். அப்போது, பழனியப்பன் தூக்கிட்டும், தனலட்சுமி தரையில் அலங்காரம் செய்த நிலையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆயக்குடி போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், தனலட்சுமிக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரது திருமணம் தடைப்பட்டு வந்தது. இதனால், விரக்தியில் இருந்த பழனியப்பன் தனலட்சுமியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு இறுதிச் சடங்கு செய்தும், பின்னா், அதே கயிற்றில் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.