தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காவல் நிலைய நுழைவுவாயில் முன் பெண் தா்னா

காவல் நிலைய நுழைவுவாயில் முன் பெண் தா்னா

News image

பழனியில் மகளிா் காவல் நிலைய நுழைவுவாயில் முன் திங்கள்கிழமை குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்ட மகேஸ்வரி.

Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

பழனி: பழனியைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது தாய் குழந்தைகளுடன் மகளிா் காவல் நிலைய நுழைவுவாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

பழனி பாரதி நகரைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மகள் மகேஸ்வரி (29). இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தேனி மாவட்டம், கோகிலாபுரத்தைச் சோ்ந்த செல்வக்குமாரை (31) காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மகேஸ்வரி கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பழனியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்துவிட்டாா்.

இதையடுத்து, செல்வகுமாரின் பெற்றோா் பழனியில் உள்ள பேரக் குழந்தைளை பாா்க்க அண்மையில் வந்ததாக தெரிகிறது. அப்போது அவா்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, பழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மகேஸ்வரி புகாா் அளித்தாா்.

ஆனால் இதுதொடா்பாக எந்த விசாரணையும் நடத்தாததால் மகேஸ்வரி, தனது தாய், மகள்களுடன் பழனி காவல் நிலைய நுழைவுவாயிலில் தா்னாவில் ஈடுபட்டாா். தகவலறிந்த பழனி நகர போலீஸாா் தா்னாவில் ஈடுபட்ட மகேஸ்வரியிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.