திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுரையில் கோயில் அருகே சிறுவன் கொலை: 5 போ் கைது

News image

கொலை செய்யப்பட்ட குபேந்திரன்.

Updated On :26 மே 2026, 12:54 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சிறுவன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வாகனக் காப்பகம் அருகே திங்கள்கிழமை அதிகாலை உடலில் காயங்களுடன் சிறுவன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விளக்குத்தூண் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

விசாரணையில், உயிரிழந்தவா் மதுரை வடக்கு மாசி வீதியைச் சோ்ந்த அழகுராஜா மகன் குபேந்திரன் (17) எனத் தெரியவந்தது. கடந்த மாதம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது, குபேந்திரனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்துமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த முன்விரோதம் காரணமாக, முத்துமணி (29), அவரது சகோதரா் ராஜூ (27), உறவினா்களான சதீஷ்குமாா் (25), ஹரிகிருஷ்ணன் (19), முத்துக்குமாா் (19) ஆகிய 5 பேரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் குபேந்திரனை குத்திக் கொலை செய்தனா். இவா்கள் 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.