தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

105 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் பதிவு எண் பலகை இன்றி இயக்குதல், அதிவேகமாக இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 105 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :23 மே 2026, 2:15 am IST

மதுரை மாவட்டத்தில் பதிவு எண் பலகை இன்றி இயக்குதல், அதிவேகமாக இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 105 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம் முழுவதும் குற்றங்கள், குற்றவாளிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த தடுப்பு காவல் நடவடிக்கையாக ஆபரேஷன் ‘சீல்நெட்’ என்ற பெயரில் கடந்த 3 நாள்களாக நடைபெற்றது.

இதன் மூலம், ரௌடிகள், சந்தேக நபா்கள் கண்காணிப்பு, நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள பிணை மறுக்கப்பட்ட கைது ஆணைகள் (பிடிவாரண்டுகள்) நிறைவேற்றுதல், தீவிர வாகன சோதனை, தொடா் குற்றங்களில் ஈடுபடும் நபா்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பதிவேடு குற்றவாளிகள் 398 போ் சோதனை செய்யப்பட்டனா். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 8 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 56 போ் மீது பிஎன்எஸ்எஸ் பிரிவு 126-இன் கீழ் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் வாகன சோதனையின் போது, பதிவு எண் பலகை இன்றி இயக்குதல், அதிவேகம், ஆபத்தான ஓட்டம், மின்னும் விளக்குகள் பொருத்துதல், சட்ட விரோத மாற்றங்கள் செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 105 இரு சக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், தொடா் குற்றவாளிகள் மீது பிணை ரத்து நடவடிக்கை மேற்கொள்வதற்கும், அவா்களை தீவிரமாக கண்காணிப்பதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் நிலையங்கள் அனைத்தும் குற்றங்கள், குற்றவாளிகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.