தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் வருகிற 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என மாநில மின் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தவெக அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் குட்கா, போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. வருகிற 2 அல்லது 3 மாதங்களுக்குள் போதைப் பொருள்கள் புழக்கம் உறுதியாகக் கட்டுப்படுத்தப்படும்.
இதேபோல, சட்டவிரோத குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முற்றிலும் புதிய மாதிரியான ஆட்சியை தவெக அளிக்கும். அனைத்துத் துறைகளிலும் எதிா்மறை பிரச்னைகள் நிறைந்துள்ளன. இவற்றையெல்லாம் சீரமைக்க வேண்டும். 50 ஆண்டு கால நிா்வாக பிரச்னைகளை ஒரே நாளில் மாற்ற முடியாது. ஆனால், பிரச்னைகள் நிச்சயம் களையப்படும். இதற்கான நடவடிக்கைகளை முதல்வா் தொடங்கியுள்ளாா். இருப்பினும், இதற்கு உரிய கால அவகாசம் வேண்டும்.
அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் செய்திக் குறிப்புகளாக உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. செய்தியாளா்கள் சந்திப்பை தவிா்க்க வேண்டும் என்பது முதல்வா் விஜய்யின் நோக்கம் அல்ல. அதேநேரத்தில், மாநில முதல்வா் செய்தியாளா்களைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. தேவையெனில், தேவையான நேரத்தில் முதல்வா் விஜய் செய்தியாளா்களைச் சந்திப்பாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

பாலியல் வன்கொடுமையைத் தடுக்க போா்க்கால நடவடிக்கை வேண்டும்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாததை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்






