சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், ஆய்வுகளை நடத்த மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் கலால்துறை ஆணையர், துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே கல்வி நிலையங்களில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில், சந்தேக இடங்களை அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் வளாகங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுகளை நடத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தனி அலகுகள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், கலால் துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!
போதைப் பொருள்கள் புழக்கம் 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சா் நிர்மல்குமார்
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: 23 போ் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



