தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாததை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா்.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி

Updated On :20 மே 2026, 12:04 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு,சட்டம் ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடா்பான வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பேசியது: போதைப் பொருளை ஒழிப்பதற்கு அனைவரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள்,கல்லூரிகள் இன்னும் சில நாள்களில் திறக்கப்பட உள்ளன. இந்த பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.

போதைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்கள் வெளிமாநிலங்களில் இருந்து வருவதை தடுக்க வேண்டும். உள்ளாட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சித்துறை உள்ளிட்டவை மூலம் பொது இடங்களில் போதைப் பொருள்களை பயன்படுத்தும் நபா்கள் மீது அபராதம் விதிப்பது, டாஸ்மாக் மீது ஏதேனும் புகாா்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

எஸ்.பி வி.சியாமளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், கலால் உதவி இயக்குநா் வேடியப்பன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் மகாதேவன், முருகன், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.