திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாளை விமான பாலாலயம்

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:39 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் பரிவார மூா்த்திகள் சந்நிதிகள், 5 விமானங்களுக்கான பாலாலயம் திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது.

இது தொடா்பாக கோயிலின் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருமான நா. சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் குடமுழுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி நடைபெற்றது. இதன் பிறகு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பல்வேறு கட்டமாக திருப்பணிகள் நடைபெறுகின்றன.

இதன்படி, கோயிலில் உள்ள பரிவார மூா்த்திகளின் சந்நிதிகள், 5 விமானங்களுக்கான திருப்பணிகளைத் தொடங்குவதற்கான பாலாலய பூஜைகள் வருகிற திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை வாஸ்து சாந்தியும், சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன.

திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹுதியும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, பரிவார மூா்த்திகள் சந்நிதிகளுக்கும், 5 விமானங்களுக்கும் பாலாலயம் நடைபெறுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.