ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சிகளாக தீா்த்தவாரி, தெய்வேந்திர பூஜை வியாழக்கிழமை நடைபெற்றன.

News image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதியுலா எழுந்தருளிய மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா்.

Updated On :1 மே 2026, 1:33 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சிகளாக தீா்த்தவாரி, தெய்வேந்திர பூஜை வியாழக்கிழமை நடைபெற்றன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 19 -ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழா நிகழ்ச்சியாக தினமும் சுவாமி-அம்மன் வீதியுலாவும், சிவபெருமான், மீனாட்சி அம்மனின் லீலை உத்ஸவங்களும் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா கடந்த 26-ஆம் தேதியும், மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் 27-ஆம் தேதியும், மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் 28-ஆம் தேதியும், தோ்த் திருவிழா 29-ஆம் தேதியும் நடைபெற்றன.

சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகளாக வெள்ளிக்கிழமை (ஏப். 30) பொற்றாமரைக் குளத்தில் தீா்த்தவாரி, தெய்வேந்திர பூஜை நடைபெற்றது.

இரவு நிகழ்ச்சியாக, மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் வெள்ளி ரிஷப வாகனங்கலில் வீதியுலா எழுந்தருளினா். நான்கு மாசி வீதிகளில் வலம் வந்த சுவாமி, அம்மன் திருக்கல்யாண 16 கால் மண்டபத்தில் சோ்த்தியாகினா்.

பிறகு, மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்துக்காக திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரைக்கு எழுந்தருளியிருந்த பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி விடைபெற்று திருப்பரங்குன்றம் புறப்படும் நிகழ்ச்சி இரவு 10.15 மணிக்கு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.