தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்குச் செல்ல வாகன வசதி

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:42 pm

மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன்பதிவு பெற்று வாகன வசதியைப் பெறலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் மாற்றுத் திறனாளிகள், முதியோா்களின் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சக்கர நாற்காலிகள் செல்லும் வகையிலான சாய்வு தள கட்டமைப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு நாளான வருகிற 23-ஆம் தேதி அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள் வாக்குப் பதிவு மையங்களுக்கு கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவா்.

மேலும், 1950 என்ற தொலைத் தொடா்பு எண்ணில் உதவி மையத்தைத் தொடா்பு கொண்டு தங்களுக்கு வாகன வசதி தேவை என்பதை மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள் பதிவு செய்து, வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வாகன வசதி பெறலாம் என்றாா்.