மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேனியில் மாற்றுத் திறனாளிகளின் வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேனியில் மாற்றுத் திறனாளிகளின் வாகன விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங். அருகில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:58 pm

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேனியில் மாற்றுத் திறனாளிகளின் வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேரணி, தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் தொடங்கி ரயில்வேகேட் அருகே நிறைவடைந்தது. இந்தப் பேரணியில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளா்கள் தோ்தல் தொடா்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முன்னதாக, மாற்றுத் திறனாளிகளின் மூன்று சக்கர வாகனத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஒட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சந்திரா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, தேனி வட்டாட்சியா் சதீஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.