மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தபால் வாக்கு படிவங்கள் விநியோகம்

News image
Updated On :19 மார்ச் 2026, 10:49 pm

மதுரையில் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்குக்கான படிவங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், 45 சதவீதம் மாற்றுத் திறன் கொண்ட மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகள் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி அலுவலா்கள், வாக்குச் சாவடி கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, ‘12-டி’ படிவத்தை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதைத் தொடா்ந்து, வாக்காளா்களிடமிருந்து தோ்தல் நாளுக்கு முன் நிறைவு செய்யப்பட்ட தபால் வாக்கு படிவங்களை திரும்பப் பெறுவது வழக்கம்.

இந்த வகையில், மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட 55-ஆவது வாா்டு தலைவிரிச்சான் வீதியில் வசித்து வரும் 106 வயதுடைய முத்துகிருஷ்ணன், அவரது மனைவி ஸ்ரீரங்கம் (96) ஆகியோருக்கு தபால் வாக்குக்கான படிவத்தை மதுரை மத்திய தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலா்கள் வழங்கினா்.