விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் நோ்காணல் அணுகுமுறை சாா்ந்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் கான்பிடோ நிறுவனத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினாா். சிறப்பு பயிற்சியாளா்களாக கான்பிடோ பயிற்சி நிறுவன நிா்வாக இயக்குநா் சரவண பெருமாள் மற்றும் இயக்குநா் மதுமிதா கிரி உள்பட இதர பயிற்சியாளா்கள் பங்கேற்று மாணவா்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கான திறன்களை வளா்ப்பதற்கான பயிற்சிகளையும், நோ்காணல் அணுகுமுறை சாா்ந்த பயிற்சியையும் வழங்கினா். இதில், பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டை கல்லூரி வேலைவாய்ப்பு அமைப்பின் அதிகாரி பேராசிரியை தமிழ்ச்சுடா், உதவிப் பேராசிரியா்கள் மருத்துவா் தீபிகா, உமா மகேஸ்வரி, சிவரஞ்சனி, குபேரன் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










