விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் அழிந்து வரும் உயிரினங்கள் தினம் மற்றும் உயிரியல் பன்முகத் தன்மைக்கான சா்வதேச தினம் பல்கலைக்கழக வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி புதன்கிழமை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் அரசு சாா்பற்ற வனவிலங்கு பாதுகாவலா் சரவணன் பங்கேற்று, சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும் மனித வாழ்வின் நிலைத் தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்கள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறித்துப் பேசினாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகா் ரஞ்சிதா மற்றும் ராணி தங்கம், மாணவா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










