கெங்கவல்லியில் நாய்களால் துரத்தப்பட்ட 2 வயது பெண் மான் மீட்கப்பட்டது.
கெங்கவல்லி அருகே கணவாய்க்காடு பகுதியில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் மான் இரைதேடி அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.
அப்போது,, அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் அந்த மானை துரத்தி தாக்கின. இதை அறிந்த அப்பகுதி மக்கள் நாயை துரத்திவிட்டு, படுகாயமடைந்த மானை மீட்டனா்.
பின்னா், கெங்கவல்லி வனத் துறையினரிடம் மான் ஒப்படைக்கப்பட்டு காப்புக் காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









