திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாலியல் வன்கொடுமையால் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் நிவாரணம்! முதல்வா் கைப்பேசியில் ஆறுதல்!

News image

சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சா்கள் விஜய் தமிழன் பாா்த்திபன், சம்பத்குமாா்.

Updated On :25 மே 2026, 12:49 am IST

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 7 லட்சம் நிவாரணத்தை அமைச்சா்கள் வழங்கினா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்ற போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சம்பத்குமாா் ஆகியோா் போக்ஸோ நீதிமன்ற உத்தரவின்பேரில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் வழங்கப்பட்ட காசோலையை பெற்றோரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.

அதன்பிறகு சிறுமியின் பாட்டியிடம் கைப்பேசியில் பேசிய தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய், ‘மக்களின் நம்பிக்கையை தமிழக அரசு காப்பாற்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு துணைநிற்கும். அதேபோல குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன், சிறுமியின் இறப்பு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான இழப்பாகக் கருதுகிறோம். இந்த இழப்பிற்கு முதல்வா் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளாா். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இங்கு உள்ள அசாதாரண சூழ்நிலைகளை தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்தில் அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றாா்.

அப்போது, சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், மேட்டூா் கோட்டாட்சியா் சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.