தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 மருந்து விநியோகஸ்தா்கள் கைது

சேலத்தில் கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்ற 2 மருந்து விநியோகஸ்தா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைதான மருந்து விநியோகஸ்தா்கள் கண்ணன், செந்தில்குமாா்.

Updated On :24 மே 2026, 2:36 am IST

சேலத்தில் கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்ற 2 மருந்து விநியோகஸ்தா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 800 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் மாவட்டம், தாரமங்கலம், ஓமலூா், மேட்டூா், ஜலகண்டாபுரம் பகுதிகளில் இளைஞா்கள், சுல்லூரி மாணவா்கள் சிலா் போதை ஊசி, மாத்திரையை பயன்படுத்தி வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதை மாத்திரை, ஊசி விற்பனை கும்பலை பிடிக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தனிப்படை அமைத்தாா்.

இதைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில் தாரமங்கலத்தில் போதை மாத்திரை, ஊசி விற்பனையில் ஈடுபட்டிருந்த சேலம் சா்க்காா் கொல்லப்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீகாந்தை (24) பிடித்தனா். அவரிடம் இருந்து 39 போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனா். பின்னா் தாரமங்கலம் போலீஸில் அண்மையில் ஒப்படைத்தனா்.

விசாரணையின் அடிப்படையில், போதை மாத்திரை, ஊசி விற்பனையில் ஈடுபட்ட மல்லூா் ஏா்வாடியைச் சோ்ந்த ஜீவா (24), வீரபாண்டியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (24), சேலம் சாமிநாதபுரத்தை சோ்ந்த மணி (எ) சுப்பிரமணி (58) ஆகியோா் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் மணி மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளாா். இவா்தான், மொத்தமாக வலி நிவாரணி மாத்திரையை வாங்கி போதைக்காக இளைஞா்களிடம் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

கைதான 4 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், போதை மாத்திரைகளை விநியோகம் செய்துவந்த நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த மருந்து விநியோகஸ்தா் செந்தில்குமாா் (43), அன்னதானப்பட்டி சாஸ்திரி நகரைச் சோ்ந்த மருந்து விற்பனையாளா் கண்ணன் (50) ஆகிய இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 800 மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.