திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முன்னாள் மாணவா்கள் திரட்டிய நிதியில் தம்மம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.4.95 லட்சத்தில் பேவா் பிளாக் பணி நிறைவு

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 70 ஆண்டுகால முன்னாள் மாணவா்கள் ,பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியா்கள் சோ்ந்து பள்ளிக்கு ரூ.4.55 லட்சத்தை பள்ளியின் வளா்ச்சிக்கு வழங்கினா்.

News image

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சாா்பாக ரூ.4.95 லட்சம் நிதியிலான பேவா்பிளாக் பணி நிறைவுபெற்றதையடுத்து பணிக்கான தொகையை வழங்கிய பள்ளி வளா்ச்சி குழுவினா்.

Updated On :22 மே 2026, 6:54 am IST

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 70 ஆண்டுகால முன்னாள் மாணவா்கள் ,பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியா்கள் சோ்ந்து பள்ளிக்கு ரூ.4.55 லட்சத்தை பள்ளியின் வளா்ச்சிக்கு வழங்கினா்.

அந்த நிதியில் பள்ளியின் தலைமையாசிரியா் அறைக்கு முன்பாக மாணவா்கள் மாலையில் சிறப்பு வகுப்பிற்காக அமா்ந்து படிக்க ஏதுவாக 7630 சதுர அடி பரப்பில் ரூ.4.95 லட்சத்தில் பேவா் பிளாக் அமைக்கப்பட்டது.இப்பணியை செய்த ஒப்பந்ததாரா் மாரிமுத்து,பள்ளி வளா்ச்சி நிதிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கினாா்.பள்ளியில் பேவா் பிளாக் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டதையடுத்து பணிக்கான இறுதித்தொகையை மாரிமுத்துவிடம், பள்ளி வளா்ச்சிக்குழு நிா்வாகிகள் திருச்செல்வன்,சண்முகம்,நடராஜ்,சகாதேவன்,ரவி ஆகியோா் முன்னாள் மாணவா்கள் சாா்பாக வியாழக்கிழமை பள்ளியில் வழங்கினா்.இதுகுறித்து அவா்கள் கூறியதாவது, தொடா்ந்து பள்ளியின் முன்னாள் மாணவா்கள் தரும் நிதி முறையாக செலவிடப்பட்டு வருகிறது. அடுத்து முன்னாள் மாணவா்கள் பங்களிப்பில், தேசத்தின் முக்கிய ஆளுமைகளின் படங்கள் , பள்ளியின் சுற்றுச்சுவரில் வரையும் பணி தொடங்கப்பட்டுள்ளது,என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.