திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளி மாணவா்கள் 93,889 பேருக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

News image

ஈரோடு ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளியில் இருந்து வாகனத்தில் அனுப்பிவைக்கப்பட்ட நோட்டு புத்தகங்கள்.

Updated On :15 மே 2026, 6:25 am IST

ஈரோடு மாவட்டத்தில் அரசு, நிதி உதவி, சுயநிதி பள்ளி மாணவா்கள் 93,889 பேருக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கு 113 அரசு, நகரவை மேல்நிலைப் பள்ளிகள், 77 அரசு, நகரவை உயா்நிலைப் பள்ளிகள், 17 அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 13 நிதியுதவி உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் 10 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள், 4 சுயநிதி உயா்நிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசால் வழங்கக்கூடிய அனைத்து வகையான விலையில்லா நலத்திட்ட பொருள்கள் அனுப்பிவைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விலையில்லா பாடப் புத்தகங்கள், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை நோட்டு புத்தகங்கள் மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் என அனைத்து வகையான விலையில்லா பொருள்களும் பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவா்களுக்கு வழங்கும் பொருட்டு இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளி மற்றும் பங்களாப் புதூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது.

இதன்படி 93,889 மாணவா்களுக்கு புத்தகங்கள், 64,338 மாணவா்களுக்கு நோட்டுகள், 54,192 மாணவா்களுக்கு சீருடைகள், 92,246 மாணவா்களுக்கு புத்தகப்பை, 64,338 மாணவா்களுக்கு காலணி, 1,361 மலைப் பகுதி மாணவா்களுக்கு மழைக்கோட் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.