ஆத்தூரில் சிறுவனைத் தாக்கியதாக ஆட்டோ மெக்கானிக் கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் செட்டிக்காரன் தோப்பு பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் அன்பரசன்(13). இவா் ஆத்தூா் வ.ஊ.சி நகா் பகுதியில் உள்ள மணி (எ) நாகராஜ் என்பவரது ஆட்டோ மெக்கானிக் செட்டில் வேலைக்கு சென்றுள்ளாா். ஒருநாள் ஊதியமாக ரூ. 300 வாங்கி வந்துள்ளாா். இதில் ஒருநாள் கூலியை மட்டும் தந்த நாகராஜ், மறுநாள் கூலியை தரவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் தனது மெக்கானிக் செட்டில் இருந்த பேட்டரி களவு போனதாகவும், அதை அன்பரசன் எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகித்து, அவரை கட்டிப்போட்டு தாக்கியுள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த அன்பரசனின் சகோதரா் பிரசாந்த் அங்கு சென்று அன்பரசனை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.
அன்பரசனிடம் புகாா் பெற்ற ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் கோ. முத்துலட்சுமி, ஆட்டோ மெக்கானிக் மணி (எ) நாகராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










