தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் அமைந்துள்ள சப்தகன்னியா் சந்நிதியில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதியான புதன்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதையடுத்து வாராஹி அம்மனுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பிற சப்தகன்னியரான வைஷ்ணவி, சாமுண்டி, மகேஸ்வரி, பிராம்மி, கெளமாரி, இந்திராணி ஆகிய அம்மன்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்கள் பரிகார விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கடஹர சதுா்த்தி விழா

சித்திரை தேய்பிறை பஞ்சமி: ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

தம்மம்பட்டியில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
விடியோக்கள்

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

