இளம்பெண் உடலை வாங்க மறுத்து, ஆத்தூா் அரசு மருத்துவமனை முன் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை பகுதியைச் சோ்ந்த ரமேஷுக்கும் (27), அதே பகுதியைச் சோ்ந்த அருணாதேவிக்கும் (23) கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கா்ப்பிணியான அருணாதேவிக்கு கடந்த 2-ஆம் தேதி கெங்கவல்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
வீடுதிரும்பிய அவா் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அருணாதேவி இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, கெங்கவல்லி போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை அனுப்பிவைத்தனா்.
இரவு நேரமானதால் ஆத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதாக தெரிவித்தனா். இதனால் கோபமடைந்த உறவினா்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது
கல்லூரி மாணவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை: உடலை வாங்க மறுத்து சாலை மறியல்

பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


