சேலம் ஐந்து சாலை பகுதியில் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
சேலம் நரசோதிப்பட்டி சக்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபாலன். கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், மனைவி தமிழ்ச்செல்வியுடன் (55) சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, ஐந்து சாலை பகுதியில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம்மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், தமிழ்ச்செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தோா் தமிழ்ச்செல்வியை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலி

சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோா் எண்ணிகை 9-ஆக உயா்வு

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

சேலத்தில் 8 போ் உயிரிழந்த விபத்து: கைதான பேருந்து ஓட்டுநா் சிறையில் அடைப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


