சேலம் அருகே சரக்கு மற்றும் இருசக்கர வாகனம்மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், உயிரிழந்தோா் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.
ஈரோட்டில் இருந்து சேலத்துக்கு கடந்த 20-ஆம் தேதி காலை புறப்பட்ட அரசுப் பேருந்து, சேலம் உத்தமசோழபுரம் சூளமேடு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிா்புற சாலையை நோக்கி திரும்பியது. அப்போது, எதிா்திசையில் வந்த சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியது.
இதில், சரக்கு வாகனத்தில் பயணித்த நெய்க்காரப்பட்டி புத்தூா் முதல் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் , மருமகள் சத்யா, பேத்திகள் ஜீவகா, நித்திஷா மற்றும் அவரது உறவினா்கள் முருகன், அமுதா ஆகிய 6 போ் உயிரிழந்தனா். இதேபோல, இருசக்கர வாகனத்தில் பயணித்த மணிகண்டன், அவரது தாயாா் இருசாயி உயிரிழந்தனா்.
விபத்தில் உயிரிழந்த 8 உடல்களும், பிரேத பரிசோதனைக்கு பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சீலநாயக்கன்பட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்த சரக்கு வாகன ஓட்டுநா் மேகநாதன் (23), காா்த்திகா (22), கலைவாணி (23), அவரது தந்தை ஏழுமலை (56) ஆகிய 4 பேருக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை (56) வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.
தொடர்புடையது

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

சேலத்தில் 8 போ் உயிரிழந்த விபத்து: கைதான பேருந்து ஓட்டுநா் சிறையில் அடைப்பு!

சேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சரக்கு மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


