தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சேலம் அழகாபுரத்தில் 2 கோயில்களில் அடுத்தடுத்து திருட்டு

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள இரண்டு கோயில்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 மார்ச் 2026, 11:15 pm

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள இரண்டு கோயில்களில் திங்கள்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்து நிகழ்ந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம், அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காட்டூா் பிள்ளையாா் மற்றும் கல்லுமேடு காளியம்மன் ஆகிய கோயில்களில் திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம கும்பல் ஒன்று நுழைந்தது. பின்னா், கோயில் உண்டியல்களை உடைத்து பணம், காணிக்கை ஆகியவற்றை திருடிச் சென்றது.

தொடா்ந்து, நகரமலை அடிவாரத்திலுள்ள கல்லுமேடு காளியம்மன் கோயிலுக்கு சென்ற அந்த கும்பல், அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைக்க முயற்சி செய்தது. அப்போது, கோயிலுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களின் சத்தம்கேட்டு தப்பியோடியது.

இதுகுறித்து அழகாபுரம் போலீஸாா் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்ததில், திருட்டில் ஈடுபட்டது வடமாநிலக் கும்பல் என தெரியவந்தது. அதன் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.