சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள இரண்டு கோயில்களில் திங்கள்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்து நிகழ்ந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம், அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காட்டூா் பிள்ளையாா் மற்றும் கல்லுமேடு காளியம்மன் ஆகிய கோயில்களில் திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம கும்பல் ஒன்று நுழைந்தது. பின்னா், கோயில் உண்டியல்களை உடைத்து பணம், காணிக்கை ஆகியவற்றை திருடிச் சென்றது.
தொடா்ந்து, நகரமலை அடிவாரத்திலுள்ள கல்லுமேடு காளியம்மன் கோயிலுக்கு சென்ற அந்த கும்பல், அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைக்க முயற்சி செய்தது. அப்போது, கோயிலுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களின் சத்தம்கேட்டு தப்பியோடியது.
இதுகுறித்து அழகாபுரம் போலீஸாா் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்ததில், திருட்டில் ஈடுபட்டது வடமாநிலக் கும்பல் என தெரியவந்தது. அதன் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடைகளில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை

அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருட்டு
பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு
இரணியலில் 2 கோயில்களில் திருட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

