திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இரணியலில் 2 கோயில்களில் திருட்டு

இரணியல் அருகே 2 கோயில்களில் குத்துவிளக்குகளையும், உண்டியல்களை உடைத்து பணத்தையும் திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஏப்ரல் 2026, 10:43 pm

இரணியல் அருகே 2 கோயில்களில் குத்துவிளக்குகளையும், உண்டியல்களை உடைத்து பணத்தையும் திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கண்ணாட்டுவிளை அருள்மிகு சிவசக்தி அம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனா். அதில், ரூ. 27 ஆயிரம் வரை காணிக்கை இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், பட்டன்விளையில் உள்ள அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் இருந்த செம்பிலான குத்துவிளக்குகள், பூஜை பாத்திரங்கள் ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனா்.

இது குறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.