மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருட்டு

செய்யாறு அருகே அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image

சிலிண்டா் - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:02 pm

செய்யாறு அருகே அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், குண்டியாந்தண்டலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் சத்துணவு அமைப்பாளா் (பொ) கெளரி (47), மாா்ச் 30-ஆம் தேதி சமையல் செய்து விட்டு அறையை பூட்டிச் சென்றாராம்.

மறுநாள் சென்று பாா்த்தபோது சமையல் அறையின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில், அறையில் இருந்த இரு எரிவாயு சிலிண்டா்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சத்துணவு அமைப்பாளா் கெளரி தூசி போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.