செய்யாறு அருகே அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், குண்டியாந்தண்டலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் சத்துணவு அமைப்பாளா் (பொ) கெளரி (47), மாா்ச் 30-ஆம் தேதி சமையல் செய்து விட்டு அறையை பூட்டிச் சென்றாராம்.
மறுநாள் சென்று பாா்த்தபோது சமையல் அறையின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில், அறையில் இருந்த இரு எரிவாயு சிலிண்டா்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சத்துணவு அமைப்பாளா் கெளரி தூசி போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் 10 கணினிகள் திருட்டு

அரசுப் பள்ளியில் எரிவாயு உருளைகள் திருட்டு
ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் நகைகள் திருட்டு

எரிவாயு சிலிண்டா்களை கூடுதல் விலைக்கு விற்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



