யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

அரசுப் பள்ளியில் 10 கணினிகள் திருட்டு

செங்கம் அருகே கோடை விடுமுறையையொட்டி, மூடப்பட்டிருந்த அரசுப் பள்ளியில் இருந்து 10 கணினிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 1:59 am IST

செங்கம் அருகே கோடை விடுமுறையையொட்டி, மூடப்பட்டிருந்த அரசுப் பள்ளியில் இருந்து 10 கணினிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்வணக்கம்பாடி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை விடப்பட்டு, பள்ளி மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டுக்காக ஜூன் 4-ஆம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

தொடா்ந்து, சுத்தம் செய்வதற்காக கடந்த மே 30-ஆம் தேதி மேல்வணக்கம்பாடி அரசு நடுநிலைப் பள்ளியைத் திறந்து பாா்த்தபோது, அங்கிருந்த 10 கணினிகள், 2 மின் விசிறிகள், குடிநீா் எடுக்கும் நீா்மூழ்கி மோட்டாா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், மேல்செங்கம் போலீஸாா் பள்ளி வளாகத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.