யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மணல் திருட்டு: பிடிபட்ட 3 மாட்டுவண்டிகளை வாகனம் மூலம் இழுத்து வந்த போலீஸாா்

News image
Updated On :4 ஜூன் 2026, 4:17 am IST

செங்கம் அருகே மாட்டுவண்டிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டவா்கள் போலீஸாரைக் கண்டதும், வண்டிகளை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து போலீஸாா் காவல் துறை வாகனத்தில் அவற்றை கட்டி 8 கி.மீ. தொலைவில் உள்ள செங்கம் காவல் நிலையத்துக்கு இழுத்து வந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கொட்டகுளம் பகுதி செய்யாற்றில் இரவு நேரங்களில் மாட்டுவண்டிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு செங்கம் போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, செய்யாற்றில் இருந்து மணல் அள்ளுவதை அறிந்த போலீஸாா் அங்கு விரைந்து சென்றனா். அப்போது, மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவா்கள் காவல் துறை வாகனத்தைப் பாா்த்ததும், வண்டிகளை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனா்.

பின்னா், மணலுடன் இருந்த 3 மாட்டுவண்டிகளை போலீஸாா் செங்கம் காவல் நிலையத்துக்கு எடுத்துவர முயற்சி செய்துள்ளனா்.

நள்ளிரவு என்பதால் போலீஸாருக்கு அப்பகுதியில் எந்தவித உதவியும் கிடைக்கவில்லையாம்.

இதனால் மணலை ஆற்றில் கொட்டிவிட்டு 3 மாட்டுவண்டிகளையும் காவல் துறை வாகனத்தில் கட்டி, கொட்டகுளத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள காவல் நிலையத்துக்கு இழுத்து வந்து நிலைய வளாகத்தில் நிறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மணல் கடத்தல் கும்பல் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸாரின் இந்த முயற்சிக்கு செங்கம் பகுதி மக்கள், விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.