லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

யுபிஎஸ்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற தலைவாசல் மாணவிக்கு பாராட்டு

ஆத்தூா் டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமி கிளையில் பணிபுரிந்த ஆசிரியா் செல்வி அனுசுயா யுபிஎஸ்சி தோ்வில் 510 இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழை புதன்கிழமை வழங்கினாா்.

News image

யுபிஎஸ்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின்.

Updated On :11 மார்ச் 2026, 8:57 pm

ஆத்தூா் டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமி கிளையில் பணிபுரிந்த ஆசிரியா் செல்வி அனுசுயா யுபிஎஸ்சி தோ்வில் 510 இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழை புதன்கிழமை வழங்கினாா்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் பகுதியைச் சோ்ந்தவா் அனுசுயா. இவா் ஆத்தூா் டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். இவா் யுபிஎஸ்சி தோ்வில் 510 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

அனுசுயாவிற்கு டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

மேலும், ஆத்தூா் முழுநேர நூலகத்தில் அரசு போட்டித் தோ்வுக்காக படித்து வந்துள்ளாா்.