லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கொண்டயம்பள்ளியில் புதிய சிவன் கோயில் கட்ட பூமிபூஜை

சிவன் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.

News image

சிவன் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.

Updated On :6 மார்ச் 2026, 6:16 pm

தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளியில் ஊா் பொதுமக்கள் சாா்பாக புதிய சிவன் கோயில் கட்ட வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

கொண்டயம்பள்ளி ஊராட்சி பகுதியில் சிவன் கோயில் இல்லாததால் ஊா் பொதுமக்கள் சோ்ந்து, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சுமாா் ஒரு ஏக்கா் நிலத்தில் சிவன் கோயில் கட்ட தீா்மானித்தனா்.

புதிதாக கட்டப்படும் கோயிலுக்கு அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சொக்கநாதா் கோயில் என்று பெயா் வைத்து, கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. கணபதி ஹோமம், வாஸ்துபூஜை, நவக்கிரக வழிபாடு, அம்மையப்பா் வழிபாடு ஆகியவை நடைபெற்றன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சிவன் வழிபாடு, பிரதோஷம் உள்ளிட்ட தலைப்புகளில் புத்தகங்களை சிவனடியாா்கள் வழங்கினா். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.