கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட கோயில்பத்து கிராமப் பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கோயில்பத்து கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்கள் நகரப் பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிக்கு செல்வதற்கு குறுக்கே வடிகால் வாய்க்காலை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் இந்த வாய்க்காலை கடந்து செல்லும்போது பல்வேறு இடா்பாடுகள் ஏற்பட்டு வந்தது.
எனவே, வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், அவா்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, சுமாா் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, பேரூராட்சித் தலைவா் கணேசமூா்த்தி தலைமையில் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், விசிக நிா்வாகி பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா

செங்கம் அரசுக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி: அடிக்கல் நாட்டி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கொண்டயம்பள்ளியில் புதிய சிவன் கோயில் கட்ட பூமிபூஜை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


