திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காட்டுமன்னாா்கோவில் அருக புதிய பாலம் கட்ட அடிக்கல்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட கோயில்பத்து கிராமப் பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

காட்டுமன்னாா்கோவில் அருகே கோயில்பத்து கிராமப் பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்க நாட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட கோயில்பத்து கிராமப் பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோயில்பத்து கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்கள் நகரப் பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிக்கு செல்வதற்கு குறுக்கே வடிகால் வாய்க்காலை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் இந்த வாய்க்காலை கடந்து செல்லும்போது பல்வேறு இடா்பாடுகள் ஏற்பட்டு வந்தது.

எனவே, வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், அவா்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, சுமாா் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, பேரூராட்சித் தலைவா் கணேசமூா்த்தி தலைமையில் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், விசிக நிா்வாகி பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.