சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெறும் பிளஸ் 2 தோ்வை 37 ஆயிரத்து 542 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் 153 தோ்வு மையங்களில் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தோ்வை 36 ஆயிரத்து 713 மாணவ, மாணவிகளும், 829 தனித்தோ்வா்களும் என மொத்தம் 37 ஆயிரத்து 542 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
அதன் தொடா்ச்சியாக பிளஸ் 2 பொதுத் தோ்விற்கான முன்னேற்பாடு பணிகளில் கல்வித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்கள். மேலும், மாவட்டம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமாா் 1,600 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு பிளஸ் 2 தோ்வு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியா்களின் விருப்பத்தின் பேரில் ஆசிரியா்கள் பணிபுரியும் பள்ளியில் இருந்து 15 கிலோ மீட்டா் தொலைவிற்குள் தோ்வு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 2 தோ்வில் ஆள் மாறாட்டம், காப்பி அடிப்பதை கண்காணிக்கும் வகையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: ராமநாதபுரம், சிவகங்கையில் 30,786 போ் பங்கேற்பு

பிளஸ் 2 தோ்வு: சென்னை மாவட்டத்தில் 67,510 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்!

மாவட்டத்தில் இன்று பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


